காணொலி மூலம் ஆளுநர் நாளை குறை கேட்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை (செப்.8) குறைகளை கேட்கவுள்ளதாக ஆட்சியர் ஆர்.கேசவன் கூறியுள்ளார்.
Published on
Updated on
1 min read

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை (செப்.8) குறைகளை கேட்கவுள்ளதாக ஆட்சியர் ஆர்.கேசவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி துணை நிலை ஆளுநர்,   காரைக்கால் மாவட்ட மக்களிடம் குறைகளை காணொலி மூலம் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை 5  முதல் 6 மணி வரை, காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், 8-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். புகார்களை எழுத்து வடிவில் அளிக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com