இருசக்கர வாகனம் திருடியவர் கைதுஇருசக்கர வாகனம் திருடியவர் கைது

திருப்பட்டினம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

திருப்பட்டினம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான போலீஸார் மேல வாஞ்சூர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது, அந்த வாகனம் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருப்பட்டினத்தில் ஒரு ஏடிஎம் மைய பகுதியிலிருந்து திருடியது என்பதும், இத்திருட்டில் ஈடுபட்டது நாகூர் ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த முருகன் (40) என்பது தெரியவந்ததையடுத்து போலீஸார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com