குழந்தைகள் பாதுகாப்புக்கு சைல்டு லைன் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சைல்டு லைன் 1098 என்பது 24 மணிநேரமும் செயல்படும் சேவை மையமாகும்.
உறைவிடம் அளித்தல், பாதுகாப்பு அளித்தல், காணாமல்போன குழந்தைகளுக்கு உதவுதல், குழந்தைகளை பெற்றோரிடம் சேர்த்தல், உணர்ச்சிமய ஆதரவு போன்ற சூழல்களில் குழந்தைகள் காணப்பட்டால், 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.