ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அக்.16-இல் பெற்றோர் சங்கம் மறியல் போராட்டம்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெற்றோர்-ஆசிரியர் சங்கம்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெற்றோர்-ஆசிரியர் சங்கம் சார்பில் அக்.16-இல் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தலைவர் அ.வின்சென்ட் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய மானியத்தை அரசு வழங்கவேண்டும் என ராமதாஸ் தலைமையிலான குழு பரிந்துரையை அரசு நிறைவேற்றவேண்டும். ஆசிரியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்றவேண்டும். மாத ஊதியம் நிலுவையின்றி வழங்கவேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர் சங்கம் அக்.16-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 கூட்டத்தில் செயலர் கே.ரவிச்சந்திரன், ஆலோசகர் கே.வீரப்பிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com