காரைக்காலில் அக்.14, 21 தேதிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி அக்.14, 21 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி அக்.14, 21 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆர்.கேசவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :  வரும் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தியாவோர் வாக்காளராகப் பதிவு செய்துகொள்வதற்கான பெயர் சேர்த்தல் பணி காரைக்கால் மாவட்டத்தில்  அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அக்.31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  தகுதி பெறும் வாக்காளர்கள் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களை சரிபார்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளையும் செய்துகொள்ளலாம். வரும் 14-ஆம் தேதி மற்றும் 21-ஆம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com