தேசிய அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்குபெறுவோரை தேர்வு செய்யும் முகாம் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
காரை மாவட்ட கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் எம்.விஸ்வேஸ்வரமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு : இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கு பெறுவதற்கான தேர்வு காரைக்கால் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறவுள்ளது.
காரைக்கால் அரசு விளையாட்டு அரங்க மைதானத்தில் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. இதில் காரைக்கால் பகுதியை சார்ந்த 16 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் (பயிற்சி பெற்ற சிறந்த கிரிக்கெட் வீரர்கள்) பங்கேற்கலாம்.
பெண்கள் 16 வயதுக்குட்பட்டவர்கள். 1.9.2002-க்குப் பிறகு பிறந்தவராக இருக்கவேண்டும். ஆண்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள், 1.9.2004-க்குப் பிறகு பிறந்தவராக இருக்கவேண்டும்.
இந்த தேர்வில் பங்குபெற விரும்புவோர், பிறந்த பதிவு மற்றும் பள்ளிச் சான்றிதழை அவசியம் கொண்டுவரவேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆ. விஸ்வேஸ்வரமூர்த்தி - 9443679123, பி. கருப்புசாமி - 9443525800 ஆகியோரை செல்லிடப் பேசியில் தொடர்புகொள்ளலாம்.