கிரிக்கெட் போட்டியில் பங்குபெறுவதற்கான தேர்வு முகாம்

தேசிய அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்குபெறுவோரை தேர்வு செய்யும் முகாம்  காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தேசிய அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்குபெறுவோரை தேர்வு செய்யும் முகாம்  காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
காரை மாவட்ட கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் எம்.விஸ்வேஸ்வரமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு :   இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கு பெறுவதற்கான தேர்வு காரைக்கால் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறவுள்ளது.
காரைக்கால் அரசு விளையாட்டு அரங்க மைதானத்தில் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. இதில் காரைக்கால் பகுதியை சார்ந்த 16 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் (பயிற்சி பெற்ற சிறந்த கிரிக்கெட் வீரர்கள்) பங்கேற்கலாம்.
பெண்கள் 16 வயதுக்குட்பட்டவர்கள். 1.9.2002-க்குப் பிறகு பிறந்தவராக இருக்கவேண்டும். ஆண்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள், 1.9.2004-க்குப் பிறகு பிறந்தவராக இருக்கவேண்டும்.
இந்த தேர்வில் பங்குபெற விரும்புவோர், பிறந்த பதிவு மற்றும் பள்ளிச் சான்றிதழை அவசியம் கொண்டுவரவேண்டும். மேலும் விவரங்களுக்கு  ஆ. விஸ்வேஸ்வரமூர்த்தி - 9443679123, பி. கருப்புசாமி - 9443525800 ஆகியோரை செல்லிடப் பேசியில் தொடர்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com