ஓடும் ரயிலில் ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

புதுச்சேரியில் ஓடும் ரயிலில் ஓவியம் வரைந்து அளித்த பள்ளி மாணவர்களை, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் பாராட்டினார்.

புதுச்சேரியில் ஓடும் ரயிலில் ஓவியம் வரைந்து அளித்த பள்ளி மாணவர்களை, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் பாராட்டினார்.
புதுச்சேரி ஓவியர் மன்றம் சார்பில், கடந்த 7 -ஆம் தேதி ஓடும் ரயிலில் ஓவியும் வரையும் போட்டி நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி, காரைக்காலில் இருந்து மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
காரைக்கால் மாவட்டம், தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேரும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேரும் என 10 பேர் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்டதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவனிடம் வெள்ளிக்கிழமை காட்டி வாழ்த்துப் பெற்றனர்.
போட்டியில், வெற்றியாளர்களுக்கான பரிசுகள் பின்னர் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் ஓவிய ஆசிரியர் முத்துக்குமார், பள்ளி நூலகர் டி. ராஜலட்சுமி, ஓவியர் கே. ஜெய்சங்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com