மன்னார்குடி ஆசிரியருக்கு சேவைச் செம்மல் விருது

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி பள்ளி ஆசிரியர் மணி. கணேசனின்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி பள்ளி ஆசிரியர் மணி. கணேசனின் கல்விச் சேவையை பாராட்டி, சேவைச் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.
கல்வி, மருத்துவம், ஆன்மிகம், தொழில், கலை, சமூக நலம், விளையாட்டு ஆகிய துறைகளில் உழைப்பால் உயர்ந்து, பல்வேறு சமூகப் பணியில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கும் நலிந்த பிரிவினருக்கும் பயன்தரும் வகையில் செயலாற்றியவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சென்னையில் செயல்பட்டு வரும், தென்னிந்திய சமூக மற்றும் பண்பாடு அகாதெமி சார்பில், ஒவ்வோர் ஆண்டும் சேவைச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டு கல்வித் துறையில், 23 ஆண்டுகள் சமூக சிந்தனையுடன் பணியாற்றி வரும் மன்னார்குடியை  அடுத்துள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மணி. கணேசன், சேவைச் செம்மல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான விழா கடந்த 8 -ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே ஆகியோர் பங்கேற்று, ஆசிரியர் மணி. கணேசனுக்கு சேவைச் செம்மல் விருது வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com