உயிரிழந்த வேளாண்துறை ஊழியர் குடும்பத்தினரிடம் காப்பீட்டுத் தொகை வழங்கல்

காரைக்காலில் உயிரிழந்த வேளாண் துறை ஊழியர் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகையை சங்க நிர்வாகத்தினர் வியாழக்கிழமை வழங்கினர்.

காரைக்காலில் உயிரிழந்த வேளாண் துறை ஊழியர் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகையை சங்க நிர்வாகத்தினர் வியாழக்கிழமை வழங்கினர்.
காரைக்கால் வேளாண் துறை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளோருக்கு, காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பணி காலம் நிறைவிலோ அல்லது இயற்கை இறப்பு, விபத்து மூலம் இறப்பு போன்ற காலங்களில் காப்பீட்டுப் பயன் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சங்க உறுப்பினராக இருந்த துறையின் செயல் விளக்க உதவியாளர் ஜே.கோவிந்தசாமி, மஸ்தூராக பணியாற்றிய டி.ராமச்சந்திரன் ஆகியோர் அண்மையில் மரணமடைந்தனர்.
இவர்களில் கோவிந்தசாமிக்கு ரூ.1.25 லட்சம், ராமச்சந்திரனுக்கு ரூ.1.64 லட்சம் காப்பீட்டுத் தொகை நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்டது. இந்த தொகைக்கான காசோலையை, அவர்களது குடும்பத்தினரிடம் காரைக்கால் வேளாண் துறை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஆர்.கணேசன் மற்றும் இயக்குநர்கள் வியாழக்கிழமை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com