காரைக்கால் மாவட்டம், நிரவியில் நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
நிரவி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற இப்பேரணியை சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இப்பேரணி பெருமாள் கோயில் பகுதியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியே நடைபெற்றது. இதில், பஞ்சாயத்து ஆணையர் ரவி உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.