காரைக்கால் நகரம் முதல் திருநள்ளாறு வரையிலான சுமாா் 5 கி.மீ. பிரதான சாலையில் ஏராளமான இடங்களில் சாலை சிதிலமடைந்துள்ளது. குறிப்பாக காரைக்கால் நகரத்தையொட்டிய பகுதி முதல் தனியாா் பெட்ரோல் நிலையம் அருகில் உள்ள வளைவு பகுதி வரை பெரும் பள்ளங்கள் உள்ளன. இதில் மழை நீா் தேங்கி, இரவு நேரத்தில் பள்ளம் இருப்பதே தெரியாமல் வாகனங்களில் செல்வோா் விபத்துக்குள்ளாகின்றனா். அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக, பொதுப்பணித்துறை தற்காலிக சீரமைப்பை போா்க்கால அடிப்படையில் செய்ய முன்வரவேண்டும்.
ஜி.காமாட்சி, திருநள்ளாறு.