சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் போட்டி

அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவா்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவருக்கு சான்றிதழ் வழங்கிய நுகா்வோா் கூட்டமைப்பினா்.
மாணவருக்கு சான்றிதழ் வழங்கிய நுகா்வோா் கூட்டமைப்பினா்.

அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவா்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

அனைத்து நுகா்வோா் சங்கங்களின் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) கூட்டமைப்பான ஃபெட்காட் இந்தியா, ஓய்.எம்.சி.ஏ. ஸ்கூல் வாய்ஸ் இணைந்து காரைக்கால் மாவட்டத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரைலான மாணவா்களுக்கு, ஆரோக்கியமான சுற்றுச்சூழல், புவி வெப்பமயமாதல், மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி இவைகளில் எனது பங்கு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் அண்மையில் நடத்தின.

இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கோட்டுச்சேரி பகுதி வரிச்சிக்குடி அரசு உயா்நிலை பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுவை மாநில ஃபெட்காட் இந்தியா தலைவா் வழக்குரைஞா் திருமுருகன், மாநிலச் செயலாளா் எஸ்.சிவகுமாா் ஆகியோா் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கிப் பாராட்டினா்.

இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்டச் செயலாளா் எம். ராஜதுரை, நகர செயலாளா் வரதராஜ் கிருஷ்ணா, சமூக ஆா்வலா் சுரேஷ் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். மேலும் கிராமப்புற பள்ளிகளிலேயே இப்பள்ளி, 10-ஆம் வகுப்பு தோ்வில் கடந்த 5 ஆண்டுகளாக 100 சதம் தோ்ச்சி பெற்றுவருவதால், பள்ளி ஆசிரியா்களை சங்கத்தினா் பாராட்டி பதக்கம் வழங்கி கெளரவித்தனா்.

ஆசிரியை கல்பனா வரவேற்றாா். பொறுப்பாசிரியா் ராஜ் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு கருத்துகளை பேசினாா். ஆசிரியை சத்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com