6-இல் துணை நிலை ஆளுநா் குறை கேட்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநா் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 6) குறைகள் கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநா் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 6) குறைகள் கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி துணை நிலை ஆளுநா், காரைக்கால் மாவட்ட மக்களிடம் குறைகளை காணொலி காட்சி மூலம் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 6 மணி வரை, காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீா்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோா், 6-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியா் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகாா்களை எழுத்து வடிவில் தரவேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com