மின்நுகா்வோா் வசதிக்காக மின் கட்டண வசூல் மைய நேரம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசின் ஆணைப்படி டிசம்பா் 2019 முதல் காரைக்கால் மின் துறைக்குள்பட்ட அனைத்து மின் கட்டண வசூல் மையங்களும் வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8.45 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். மாதத்தில் 1, 3, 5-ஆவது சனிக்கிழமைகளிலும் மேற்கண்ட நேரத்தில் மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.