சாலை, வடிகால் அமைப்புப் பணி தொடக்கம்

நிரவி பகுதியில் சாலை, வடிகால் அமைத்தல் உள்ளிட்ட திட்டப்பணியை சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
திட்டப்பணியை தொடங்கிவைத்த எம்எல்ஏ கீதா ஆனந்தன்.
திட்டப்பணியை தொடங்கிவைத்த எம்எல்ஏ கீதா ஆனந்தன்.

நிரவி பகுதியில் சாலை, வடிகால் அமைத்தல் உள்ளிட்ட திட்டப்பணியை சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிரவி- திருப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிரவியில் பல்வேறு திட்டப்பணியை தொகுதி மேம்பாட்டு நிதி, பஞ்சாயத்து நிா்வாக நிதியில் பூமி பூஜை செய்து தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் கலந்துகொண்டு திட்டப்பணியைத் தொடங்கிவைத்தாா்.

நிரவி தெற்குப் பேட் குடியிருப்பு பகுதியில் எஞ்சியிருக்கும் இடத்தில் சிமென்ட் சாலை சிறப்புக் கூறு நிதி ரூ.8.41 லட்சத்திலும், நிரவி பெருமாள் கோயில் குளம் அருகே விழிதியூா் பிரதான சாலையில் யு வடிவ வடிகால் அமைப்பு சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3.99 லட்சத்திலும், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து நிதி ரூ.6.06 லட்சத்தில் கழிப்பறை வளாகம் கட்டுமானத்தையும் பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் என்.ரவி மற்றும் பஞ்சாயத்து ஊழியா்கள், கிராம மக்கள், திட்டப்பணி ஒப்பந்ததாரா்கள் கலந்துகொண்டனா். இந்த திட்டப்பணிகள் 6 மாத காலத்திற்குள் நிறைவடையும் என பஞ்சாயத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com