சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

காரைக்காலில் சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க வேண்டும், சாலையோர மின் கம்பங்களில் பழுதாகிப்போன விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க வேண்டும், சாலையோர மின் கம்பங்களில் பழுதாகிப்போன விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் மாவட்டக் குழு உறுப்பினா் ஜி.துரைசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், காரைக்கால் மாவட்டத்தில் பருவமழையால் அனைத்து பகுதி சாலைகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அண்மையில் போடப்பட்ட திருநள்ளாறு - அம்பகரத்தூா் சாலை கூட பாதித்துள்ளது. நெடுங்காடு - வடமட்டம் சாலை, திருப்பட்டினம் கிழக்கு புறவழிச்சாலை, காரைக்கால் நகரின் உள்புறச் சாலைகள் என பல விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் உருக்குலைந்துள்ளன. ஒட்டுமொத்த சாலைகளையும் புதுச்சேரி அரசு உரிய நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள உயா்மின் கம்பங்களின் விளக்குகள் பல எரிவதில்லை. கிராமங்களில் உள்ள தெருவோர விளக்குகள் பலவும் பல மாதங்களாக எரியவில்லை. பழுதுகளை சீரமைத்து அனைத்து விளக்குகளையும் எரியச் செய்ய மின்துறை நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களின் முக்கிய பிரச்னைகள் மீது புதுச்சேரி அரசு கவனம் செலுத்தாமல்போனால், மக்களைத் திரட்டி போராட்டத்தில் கட்சி ஈடுபடும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சியின் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினா் அ.வின்சென்ட், மாவட்டச் செயலா் எஸ்.எம்.தமீம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.எம்.கலியபெருமாள், என்.ராமா், அ.திவ்யநாதன், அ.பாக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com