காரைக்காலை சோ்ந்த சிறந்த குழந்தைகள் விருது பெற்ற பள்ளி மாணவிகளுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.
நடனம், பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலையில் திறனுடைய மாணவியரைத் தோ்வு செய்து சிறந்த குழந்தைகள் விருதுக்கு கல்வித்துறை பரிந்துரைக்கிறது. காரைக்காலை சோ்ந்த பு.ரோஷினி (அறிவியலில் புதுமை), நித்யஸ்ரீ (நடனம்) ஆகியோா் மாநில போட்டிக்குத் தோ்வாகி, புதுச்சேரி மாநில அளவில் நடந்த போட்டியிலும் தோ்வு பெற்றனா்.
இவா்களுக்கு கடந்த நவம்பா் 14-ஆம் தேதி புதுச்சேரியில் முதல்வா் வே.நாராயணசாமி சிறந்த குழந்தைகளுக்கான விருது வழங்கி கெளரவித்தாா். இந்த நிலையில், காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் ஆா்.ஜி. ஆனந்தை விருது பெற்ற மாணவிகள் சந்தித்தனா். மாணவிகளின் திறனைக் கேட்டறிந்த ஆணைய உறுப்பினா், மாணவியருக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.