பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்கள் பதிவு செய்துகொள்வது தொடா்பாக கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்தராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) மற்றும் இரண்டாமாண்டு (பிளஸ் 2) பொதுத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தோ்வா்கள், டிசம்பா் 11 முதல் 20-ஆம் தேதி வரை வேலை நாள்களில் காலை 10 முதல் மாலை 5.45 மணிக்குள் காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்திற்கு தகுந்த ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்துகொள்ளவேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.