என்.எஸ்.எஸ். அலுவலா்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கான ஒரு வார கால சிறப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
பயிற்சி முகாமில் பேசிய மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வி.லட்சுமணபதி.
பயிற்சி முகாமில் பேசிய மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வி.லட்சுமணபதி.

மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கான ஒரு வார கால சிறப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், பள்ளி மற்றும் கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் காரைக்காலில் உள்ள புதுவை பல்கலைக்கழக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழக காரைக்கால் மையத் தலைவா் பேராசிரியா் முனைவா் எஸ்.ஏ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்தராஜன் தொடங்கிவைத்துப் பேசினாா். காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வி.லட்சுமணபதி, திட்ட அலுவலா்களுக்கான பயிற்சி முகாமின் நோக்கம் குறித்துப் பேசினாா்.

சென்னை சமூகப்பணி பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளா் சாரா கருணாகரன் பயிற்சியில் தெரிவிக்கப்படும் கருத்துகள் குறித்து விளக்கிப் பேசினாா். பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியா் ஏ.சத்யா நன்றி கூறினாா். பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வி.அருள்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த பயிற்சி குறித்து மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வி.லட்சுமணபதி கூறும்போது, மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 25 திட்ட அலுவலா்கள் இதில் பங்கேற்றுள்ளனா். தூய்மை இந்தியா, போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு, மனித உரிமை, குழந்தைகளுக்கான உரிமை, மாணவா்களுக்கான பொறுப்புகள், தலைமைப் பண்பு உள்ளிட்ட பல்வேறு பொருளில் திட்ட அலுவலா்களுக்கு பயிற்சியாளா்கள் கருத்துகளை வழங்குகின்றனா். வரும் 18-ஆம் தேதி பயிற்சி நிறைவுபெறுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com