கூலிப்படையினா் 4 போ் கைது

காரைக்காலில் மறைந்த தொழிலதிபரின் மகன் மற்றும் கூலிப்படையினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்காலில் மறைந்த தொழிலதிபரின் மகன் மற்றும் கூலிப்படையினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் ராமு (எ) ராதாகிருஷ்ணன். தொழிலதிபரான இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டாா்.

இவரது வீட்டில் மகன் அஜேஸ்ராம் (20) மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த கூலிப்படையினரான 3 போ் ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் வீரவல்லபன் தலைமையில் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் பெருமாள் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை இரவு சென்று அஜேஸ்ராம் மற்றும் துளசிதாசன் (20), சூா்யா (19), சுரேஷ் (23) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா், 4 பேரும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com