இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பண விழா

காரைக்காலில் இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பண நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பண நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட இந்து  முன்னணி அமைப்பு சார்பில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இந்து முன்னணி  இயக்கத்தின் முதல் தலைவருமான தாணுலிங்க நாடார் பிறந்தநாள் சமுதாய சமர்ப்பண தினமாகக் கொண்டாடப்பட்டது.
காரைக்கால் மாவட்ட வாணிய வைசிய சங்கத்தின் தலைவர் ஜி. பாலமுருகன் தலைமை வகித்தார். இந்து முன்னணியின் திருச்சி கோட்டப் பொதுச்செயலாளர் இரா.குணசேகரன்  சிறப்புரையாற்றினார். இந்து முன்னணியின் தொடக்கம், கொள்கை,  முதல் தலைவர் தாணுலிங்க நாடாரின் உழைப்பு குறித்து அவர் பேசினார்.
நிகழ்ச்சியில்  பாரத மாதா, தாணுலிங்க நாடார் ஆகியோரின் உருவப் படத்துக்கு  மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வன்னியர் சங்கத் தலைவர் எஸ். மாரியப்பன், கன்னடிய சங்கச் செயலர் ரா. ராஜேஷ், பாஜக காரைக்கால் மாவட்டத் தலைவர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், பாஜக மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் எஸ். செந்திலதிபன், இந்து முன்னணி துணைத் தலைவர் ஜி.வைத்தியநாதன், பாஜக மாவட்ட  முன்னாள் தலைவர்கள் என்.சிவசுப்பிரமணியன், எஸ். ராஜவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கே.எஸ். விஜயன் வரவேற்றார். துணைத் தலைவர் பா.வெங்கடாசலம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com