காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜன.12) பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சனிக்கிழமை வந்து மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கவுள்ளனர். இதில், இருதயவியல் மற்றும் இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.