ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு

காரைக்கால் பகுதி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

காரைக்கால் பகுதி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
காரைக்கால் பகுதி ஞானபிரகாசம் வீதியை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி சொக்கலிங்கம் (65). இவர், பொங்கல் பண்டிகை நாளான செவ்வாய்க்கிழமை மகன் கருப்பன் மற்றும் பேரக் குழந்தைகள் இருவருடன் காரைக்கால் அருகே புதுத்துறையில் உள்ள அரசலாற்று ரெகுலேட்டர் பகுதியில் குளிக்கச்சென்றார். அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த போது, திடீரென சொக்கலிங்கத்தை மட்டும் காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்தவர்கள் காரைக்கால் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு விரைந்து சென்ற நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சொக்கலிங்கத்தை தேடி கண்டுபிடிக்கமுடியவில்லை. தொடர்ந்து தேடிய நிலையில், நீண்ட நேரத்துக்குப் பிறகு ஆற்றின் கடைமடை நீர்த்தேக்க மதகு அருகே சொக்கலிங்கம் உயிரிழந்த நிலையில் சடமாக கரை ஒதுங்கியதையடுத்து, அவரது சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com