சந்திர புஷ்கரணியில் ஸ்ரீரங்கநாயகித் தாயார் தீர்த்தவாரி

கனுப் பொங்கலையொட்டி, காரைக்கால் சந்திரபுஷ்கரணியில் ஸ்ரீரங்கநாயகித் தாயார் தீர்த்தவாரி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  

கனுப் பொங்கலையொட்டி, காரைக்கால் சந்திரபுஷ்கரணியில் ஸ்ரீரங்கநாயகித் தாயார் தீர்த்தவாரி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  
பொங்கல் நாளின் 2-ஆவது நாளாக கனுப் பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகியவை கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கனுப்பொடி (கலவை சாதம்) வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட ஸ்ரீரங்கநாயகித் தாயார் கோயில் பிராகாரம்  வடக்கு வாசல் அருகே  எழுந்தருளச் செய்யப்பட்டார்.  சந்திரபுஷ்கரணிக்கு பட்டாச்சாரியார்களால் சடாரி கொண்டு செல்லப்பட்டு, அங்கு கனுப் பொடி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, சடாரிக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, பட்டாச்சாரியார் சடாரியுடன் சந்திரபுஷ்கரணியில் (அம்மையார் குளம்) இறங்கி நீராடினார். அவரைத் தொடர்ந்து, பக்தர்கள் குளத்தில்  புனித நீராடினர். தொடர்ந்து,  ஸ்ரீரங்கநாயகித் தாயாருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.  
இதேபோல், காரைக்கால் ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் இருந்து கனுப் பொடி வைக்க ஸ்ரீ ஆடிப்பூரத்தம்மன் அம்மையார் குளத்துக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.  
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் அறங்காவல் குழுவினர் மற்றும் நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆண்டில் ஒரு முறை மட்டுமே ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் தீர்த்தவாரி நடத்தப்படுவதும், அதுவும் தாயார் கோயில் வளாகத்தில் இருந்துகொண்டு, சடாரி மட்டும் தீர்த்தக்கரைக்கு செல்லும் நிகழ்வு நடத்தப்படுவது விசேஷ நிகழ்ச்சியாக கருதப்படுவதால் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். மூலவர் ஸ்ரீரங்கநாதர், உத்ஸவர் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாளுக்கும் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com