ஹைட்ரோகார்பன் திட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காரைக்காலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்காலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் அரசலாறு பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ.முஹம்மது பிலால் தலைமை வகித்தார்.  சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃபிரண்ட் மாவட்டத் தலைவர் எம்.ஓய்.அஸ்ரப் அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அரசியல் குழு தலைவர் அரசு வணங்காமுடி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச செயலர் பி.மதியழகன், எஸ்.யு.சி.ஐ. கட்சி மாவட்டச் செயலர் ஜெ.முஹம்மது பிலால், காரை பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் பி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பேசினர். மாவட்டச் செயலாளர் பி. அப்துல் ரஹ்மான் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர்
மன்சூர்ஷா மரைக்காயர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com