காரைக்காலில் நாளை ஜிப்மர் மருத்துவ முகாம்
By DIN | Published On : 19th July 2019 12:36 AM | Last Updated : 19th July 2019 12:36 AM | அ+அ அ- |

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜூலை 20) புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சனிக்கிழமை குழந்தைகள் நலம் மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.