முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி  ஊக்கத் தொகை பெற  விண்ணப்பிக்கலாம்

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மறு வேலை பெற்றிடாத மற்றும் வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் இடம் பெறாதவருமான முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்கள், தங்கள் குழந்தைகளின் பள்ளி, கல்லூரிப் படிப்புக்கு (2018-2019) ஊக்கத் தொகை பெற விண்ணப்பங்கள் முப்படை நலத்துறை மூலம் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் 13.6.2019 முதல் 12.7.2019 வரை அலுவலக நாள்களில் காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து முப்படை நலத்துறையில் 2.8.2019-க்குள் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலம் கடந்து சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com