காரைக்கால்
அரசு மருத்துவமனையில் 22-இல் சிறப்பு முகாம்
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 22) நடைபெறவுள்ளது.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 22) நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் வரும் சனிக்கிழமை நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை, ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.