பொள்ளாச்சி சம்பவம்: விசிக ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, காரைக்காலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, காரைக்காலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்கால் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இயக்கத்தின் மாநிலத் துணைச் செயலர்கள் ஆர்.அரசக்குமாரி, ஆர்.வேம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சியின் மாநில அரசியல் குழு செயலர் அரசு. வணங்காமுடி, துணைச் செயலர் பொன். செந்தமிழ்ச்செல்வன், மகளிர் விடுதலை இயக்க திருநள்ளாறு தொகுதி அமைப்பாளர் ஆ. ரூபி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கண்டன உரையாற்றினர். பெண்கள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com