காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு நிர்வாகிகள் நியமனம்

புதுச்சேரி மாநில, காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநில, காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ. நமச்சிவாயம் வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவுத் தலைவராக எல்.எஸ்.பி. சோழசிங்கராயர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத் துணைத் தலைவராக ஓ. முகம்மது அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
காரைக்கால் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில், நெடுங்காடு தொகுதி தலைவராக ஆர்.ஆரோக்கியராஜ்,  திருநள்ளாறு தொகுதி தலைவராக என்.முகம்மது ஹனீபா, காரைக்கால் வடக்குத் தலைவராக இ.ஜெயசீலன்,  காரைக்கால் தெற்குத் தலைவராக  ஜே.அப்துல் மஜீது மரைக்காயர், நிரவி - திருப்பட்டினம் தொகுதி தலைவராக  எஸ்.கனீஷா மரைக்காயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com