மே தினத்தையொட்டி, காரைக்காலில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
கடந்த 1922 -ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர் கலந்துகொண்டு, பொதுவுடைமை இயக்கப் பிரதிநிதியாக தம்மை அறிமுகம் செய்து, உழைக்கும் வர்க்கத்துக்குப் பாடுபட்டவர். 1923-ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடிய முதல் மனிதர். 1925-ஆம் ஆண்டு பொதுவுடைமைக் கொடியை ஆங்கிலேய ஆதிக்கத்தின்போதே ஏற்றியவர்.
இதுபோன்ற பல போற்றுதலுக்குரியவர் சிங்காரவேலர் என காரைக்கால் மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் அவருக்கு புகழாரம் சூட்டிப் பேசினர். முன்னதாக, சிங்காரவேலர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தினர்.