சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மே தினத்தையொட்டி, காரைக்காலில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள்

மே தினத்தையொட்டி, காரைக்காலில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். 
கடந்த 1922 -ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர் கலந்துகொண்டு, பொதுவுடைமை இயக்கப் பிரதிநிதியாக தம்மை அறிமுகம் செய்து, உழைக்கும் வர்க்கத்துக்குப் பாடுபட்டவர். 1923-ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடிய முதல் மனிதர். 1925-ஆம் ஆண்டு பொதுவுடைமைக் கொடியை ஆங்கிலேய ஆதிக்கத்தின்போதே ஏற்றியவர்.
 இதுபோன்ற பல போற்றுதலுக்குரியவர் சிங்காரவேலர் என காரைக்கால் மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் அவருக்கு புகழாரம் சூட்டிப் பேசினர். முன்னதாக, சிங்காரவேலர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com