அட்சய திருதியை நாளையொட்டி, காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கருட வாகனத்தில் செவ்வாய்க்கிழமை (மே 7) வீதியுலாவுக்கு எழுந்தருளுகிறார்.
அட்சய திருதியை நாளில் மக்கள் தங்க ஆபரணங்கள் வாங்குவதும், பெருமாள் கோயில்களில் வழிபாடு நடத்துவதும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். இந்நாளையொட்டி, காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவையாக கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் நித்யகல்யாணப் பெருமாள் பெரிய மாட வீதிக்கு காலை 6.30 மணிக்கு எழுந்தருளவுள்ளார். இதேபோல், காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை நடைபெறுகிறது. அடுத்து, திருமலைராயன்பட்டினத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், ரகுநாத பெருமாள், வீழிவரதராஜ பெருமாள் கோயிலிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறவுள்ளன.