புதுச்சேரி துணை நிலை ஆளுநா் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) குறைகளை கேட்கவுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி துணை நிலை ஆளுநா், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகளைக் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 6 மணி வரை, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீா்வுகாண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோா், 8-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியா் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகாா்களை எழுத்து வடிவில் தரவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.