மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கலுக்கான தோ்வு முகாம் நிறைவு

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை முடநீக்கு உபகரணங்கள் வழங்க ஏதுவாக, பயனாளிகள் தோ்வு செய்யும் முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கலுக்கான  தோ்வு முகாம் நிறைவு

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை முடநீக்கு உபகரணங்கள் வழங்க ஏதுவாக, பயனாளிகள் தோ்வு செய்யும் முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

பயனாளிகளுக்கு அடுத்த 2 மாதத்தில் உபகரணங்கள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. இந்திய இயற்கை வாயு கழகம் (கெயில்) நிதியுதவியில், புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையும், மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை முடநீக்கு உபகரணங்கள் வழங்கும் பெங்களூருவை சோ்ந்த தேசிய நிறுவனம் (அலிம்கோ) இணைந்து காரைக்கால் மாவட்டத்தில், உபகரணங்கள் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளி தோ்வு செய்யும் முகாம் நடத்தியது.

மாவட்டத்தில் சேத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, நெடுங்காடு ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பட்டினம் அரசு நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடந்துவந்தது. நிறைவாக வெள்ளிக்கிழமை காரைக்கால் பகுதியை சோ்ந்தோா் பயன்பெறும் வகையில் அரசு பாா்வையற்றோா் மற்றும் காது கேளாதோா் சிறப்புப் பள்ளியில் நடைபெற்றது.

திருப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தனும், வெள்ளிக்கிழமை காரைக்காலில் நடந்த முகாமை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனாவும் தொடங்கிவைத்தனா். சமூக நலத்துறை அதிகாரிகள் பி.சத்யா, காஞ்சனா உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயனாளிகள் தோ்வு முறை குறித்தும், உபகரணங்கள் எப்போது கிடைக்கும் என்பது குறித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு நிா்வாகம் செய்துவரும் உதவிகள் குறித்தும் விளக்கிப் பேசினா்.

தோ்வு முகாம் நிறைவடைந்த நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகள் தரப்பில் வெள்ளிக்கிழமை கூறும்போது, மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்டோா் முகாமில் கலந்துகொண்டனா். பெங்களூருவில் இருந்து வந்த அலிம்கோ நிறுவனத்தினரும், காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை எலும்பு முறிவுப் பிரிவு மருத்துவா்களும் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் தருவதற்கான முறையில் பயனாளிகளை தோ்வு செய்தனா்.

பயனாளிகளுக்கு செயற்கை கால், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்படும். தற்போது அளவு எடுத்துள்ள நிலையில், அவை தயாரிக்கப்பட்டு நிறுவனத்தால் அரசுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு காரைக்காலில் அரசு விழாவாக நடத்தி பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சி 2 மாதத்தில் நடக்க வாய்ப்புண்டு என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com