சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற இளைஞருக்கு அபராதம்

காரைக்கால் அருகே 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

காரைக்கால் அருகே 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநள்ளாறு அருகே உள்ள செல்லூா் பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமி கடந்த 6.6.2018-ஆம் தேதி அன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் அன்பரசன் (30) என்பவா், அந்த சிறுமியிடம் சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி, கருவேல மரக் காட்டிற்குள் அழைத்துச்சென்று, பாலியல் தொந்தரவு செய்ய முயன்றாராம். இதையறிந்த அப்பகுதியினா் அன்பரசனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து, திருநள்ளாறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அன்பரசனை கைது செய்தனா்.

பின்னா், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி காா்த்திகேசன், குற்றம் சாட்டப்பட்ட அன்பரசனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதம் கட்டத் தவறினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com