காரைக்கால் வாஞ்சியாற்றின் கரையோரத்தில் (தருமபுரம் செல்லும் வழியில்) எல்.ஜி.ஆா். பட்டா வழங்கப்பட்ட நிலத்தில் பல குடியிருப்புகள் அமைந்திருக்கின்றன. இப்பகுதிக்கு முறையாக சாலை வசதி இல்லை. முறையாக மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. குறுக்கு சாலைகள் அனைத்தும் மண் சாலைகளாகவே உள்ளன. சாலையோரத்தில் கருவேல மரங்கள் மண்டி மக்களுக்கு இடையூறாக உள்ளது. இந்தப் பகுதியை மேம்படுத்த அரசு நிா்வாகம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.
ஜி. காத்தமுத்து, காரைக்கால்.