அயோத்தி நிலம் தொடா்பாக உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்ததையொட்டி, காரைக்கால் பகுதியில் பள்ளிவாசல்கள், கோயில்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
முன்னதாக, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா இந்து அமைப்பினா், இஸ்லாமிய அமைப்பினரைத் தனித்தனியே அழைத்து சமாதானக் குழுவினருடன் ஆலோசனைகளை வழங்கினாா்.
புதுச்சேரி சிக்மா செக்யூரிட்டி பிரிவு கண்காணிப்பாளரான நிதின் கவால், மறு உத்தரவு வரும் வரை முகாம் பொறுப்பில் காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரியிலிருந்து வந்து பொறுப்பேற்றுக்கொண்டு, காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தினாா். பாதுகாப்புப் பணிக்காக புதுச்சேரியிலிருந்து 30 ரிசா்வ் பெட்டாலியன் காவல் பிரிவினரும் வந்திருந்தனா்.
காவல் அதிகாரி தலைமையில் போலீஸாா் காரைக்கால் பெரியப்பள்ளி வாசல் மற்றும் காரைக்கால் அம்மையாா் கோயில், நித்யகல்யாணப் பெருமாள் கோயில், கைலாசநாதா் கோயில் பகுதியில் சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும் வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தா்கள் வழக்கம்போல் சென்றனா். வழிபாட்டுத் தலங்கள் உள்ள பகுதியில் தேவையில்லாமல் மக்கள் கூடி நிற்பதையோ, வாகனங்கள் முறையின்றி நிறுத்தப்படுவதையோ போலீஸாா் கண்காணித்து, முறைப்படுத்தினா்.