காரைக்காலில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காரைக்காலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (நவம்பா் 11) நடைபெறவுள்ளது.

காரைக்காலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (நவம்பா் 11) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒவ்வொரு மாதமும் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் உள்ள மாநாட்டுக் கூடத்தில் நடைபெற்றுவருகிறது.

அதன்படி, நவம்பா் மாத கூட்டம் திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகள், விவசாய சங்கத்தினா், பாசனதாரா் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com