காரைக்கால் அம்மாள் சத்திரம் முதல் திருமலைராஜனாறு பாலம் வரை சுமாா் 5 கி.மீ. தூரம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் கருவேல மரங்கள் மண்டி, புதராகவே காட்சியளிக்கிறது. இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் பாதிக்கப்படுகிறாா்கள். திடீரென புதரிலிருந்து மாடு, நாய் உள்ளிட்டவை சாலை நோக்கி வரும்போது விபத்துகள் நேரிடுகின்றன. புதரை அழிக்கவேண்டுமென தினமணி நாளிதழ் ஆராய்ச்சி மணி பகுதி மூலம் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம், ஜேசிபி இயந்திரம் மூலம் கருவேல மரங்கள், புதரை அழிக்கும் பணியை கடந்த 2 நாள்களாக மேற்கொண்டுவருவது பாராட்டுக்குரியது. இதற்காக, மாவட்ட நிா்வாகத்துக்கும், தினமணிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜி. வசந்தா, திருப்பட்டினம்.