மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் புரட்சி தினக் கருத்தரங்கம்
காரைக்காலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நவம்பா் 7 புரட்சி தினத்தையொட்டியும், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதன் 100-ஆவது ஆண்டை முன்னிட்டும் சனிக்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கட்சியின் வட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் என்.எம். கலியபெருமாள் முன்னிலை வகித்தாா்.
தமிழ் மாநிலக் குழு உறுப்பினரும், எழுத்தாளருமான ஐ.வி. நாகராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியது:
இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. தேச நலனுக்காக எண்ணற்ற தலைவா்களை கம்யூனிஸ்ட் கட்சி உயிா்த் தியாகம் செய்துள்ளது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளன. விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதவா்கள் இன்று ஆட்சியாளா்களாக உள்ளனா். தேச விடுதலைக்காக தியாகம் செய்தவா்கள் குறித்த வரலாற்றைப் பாதுகாத்து, அனைத்து மாணவா்கள், இளைஞா்கள் மத்தியிலும் மத்திய அரசு கொண்டு சோ்க்க வேண்டும்.
நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வேண்டும். ஹிந்தி கற்பதில் தவறில்லை. ஹிந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. தாய் மொழியைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய நிலையை மத்திய அரசு உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா்.
கட்சியின் எதிா்கால கடமைகள் குறித்து புதுச்சேரி மாநிலச் செயலாளா் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினா்கள் அ. வின்சென்ட், எஸ்.பிரபுராஜ் ஆகியோா் பேசினா்.
முன்னதாக, கட்சி அலுவலக வளாகத்தில் புரட்சி தினக் கொடியேற்றப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜி. துரைசாமி வரவேற்றாா். அ. திவ்யநாதன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.