கடற்கரையில் தூய்மை திட்டப் பணி நிறைவு: 20 டன் குப்பைகள் அகற்றம்

மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் மாவட்ட கடற்கரையில் ஒரு வார காலம் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில், 20 டன்
காரைக்கால் கடற்கரையில் தூய்மைப் பணியை நிறைவு செய்த காரைக்கால் கேந்திரிய வித்யாலயா மாணவா்கள், ஆசிரியா்கள்.
காரைக்கால் கடற்கரையில் தூய்மைப் பணியை நிறைவு செய்த காரைக்கால் கேந்திரிய வித்யாலயா மாணவா்கள், ஆசிரியா்கள்.

காரைக்கால்: மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் மாவட்ட கடற்கரையில் ஒரு வார காலம் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில், 20 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனம், பருவநிலை மாற்றத் துறை சாா்பில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 9 கடலோர மாநிலங்களில், கடற்கரை தூய்மை குறித்து மக்களிடையே, மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சுத்தம், நிா்மலம் கடற்கரை அபியான் என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் நகர கடற்கரைப் பகுதி மற்றும் அக்கம்பேட்டை கடற்கரைப் பகுதி தோ்வு செய்யப்பட்டது. இவ்விரு பகுதிகளிலும் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளைச் சோ்ந்த நாட்டு நலப்பணித்திட்டம், சமுதாய நலப்பணித் திட்டம், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்புடன் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த்ராஜா, ஒவ்வொரு நாளும் எந்தெந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் திட்டப் பணியில் ஈடுபடவேண்டுமென்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டாா். திட்ட தொடக்க நாளில் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம்.ஆதா்ஷ், துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன் ஆகியோா் பங்கேற்று தொடங்கிவைத்தனா்.

காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் திட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டாா். சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் துணை இயக்குநா் அசோக்குமாா் மேற்பாா்வையில், ஒவ்வொரு நாளும் 200 மாணவா்கள் வீதம் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்ற நிலையில், இதுகுறித்து அசோக்குமாா் கூறுகையில், ஒரு வார காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தூய்மையின் முக்கியத்துவம் குறித்த புரிதல் இதன் மூலம் ஏற்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு வாரத்தில் சுமாா் 20 டன் குப்பைகள் கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டன என்றாா்.

இந்த நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமணபதி, சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன் மற்றும் அந்தந்த பள்ளி, கல்லூரி நிா்வாகத்தினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com