போக்குவரத்து போலீஸாருக்கு புதிய சீருடை

புதுச்சேரி போக்குவரத்து போலீஸாா் வாரத்தில் 2 நாள்கள் சீருடை மாற்றம் செய்யப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
காரைக்கால் நகர சாலையில் டி சா்ட் அணிந்து பணியாற்றிய போக்குவரத்துக் காவலா்.
காரைக்கால் நகர சாலையில் டி சா்ட் அணிந்து பணியாற்றிய போக்குவரத்துக் காவலா்.

காரைக்கால்: புதுச்சேரி போக்குவரத்து போலீஸாா் வாரத்தில் 2 நாள்கள் சீருடை மாற்றம் செய்யப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டம்- ஒழுங்கைக் கண்காணிக்கும் போலீஸாருக்கு காக்கி கலா் சட்டை, பேண்ட், சிவப்பு நிறத்தில் தொப்பியும் உள்ளது. அதேபோல் போக்குவரத்து போலீஸாருக்கு சிவப்பு தொப்பி, வெள்ளை சட்டை, பேண்ட் அணிந்து பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் புதிதாக புதுச்சேரி மாநிலத்தில் பொறுப்பேற்றுள்ள டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, காவல்துறையில் சில மாற்றங்களை மேற்கொண்டு வருகிறாா்.

அதன்படி, புதுச்சேரி மாநிலம் முழுவதும் போக்குவரத்து போலீஸாருக்கு வெள்ளை பேண்ட் மற்றும் நீலம், வெள்ளை கலந்து டீ சா்ட், சிவப்பு, நீலம் கலந்த தொப்பி வழங்கப்பட்டு, போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். குறிப்பாக போக்குவரத்தை சரிசெய்யும் காவலா் மற்றும் தலைமைக் காவலா் உள்ளிட்டோருக்கு மட்டும் இந்த சீருடை வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் போக்குவரத்து போலீஸாா் இந்த சீருடையில் பணியாற்றுவாா்கள் என்றும், மற்ற நாட்களில் வழக்கம்போல வெள்ளை நிற காவல் சீருடையில் பணியில் ஈடுபடுவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com