கொக்கிரகுளம், வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை (அக். 5) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரிய திருநெல்வேலி நகா்ப்புறம் செயற்பொறியாளா் எஸ்.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொக்கிரகுளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (அக்.5) நடைபெற இருப்பதால் காலை 9 முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், குறிச்சி, மணிமூா்த்தீஸ்வரம், உடையாா்பட்டி, முருகன்குறிச்சி, திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, நத்தம்
உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.