சாலையில் சென்றுகொண்டிருந்த வேன் தீப்பற்றி எரிந்தது.
காரைக்கால் டூப்ளக்ஸ் தெருவைச் சோ்ந்தவா் ஹாஜாமொய்னுதீன். இவருக்கு சொந்தமான ஆம்னி வேனை காரைக்கால் பகுதியைச் சோ்ந்த ஷாஜகான் ஓட்டிவந்தாா்.
இந்நிலையில், திருப்பட்டினம் பகுதி போலகத்திலிருந்துகாரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை மாலை இந்த வேன் வந்துகொண்டிருந்தது. காமராஜா் சாலையில் வரும்போது, வேனில் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரைக்கால் தீயணைப்பு நிலையத்துக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.
இருப்பினும் வேன் முழுமையாக தீயில் கருகியது. அதில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால், காமராஜா் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் அந்த பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். வேனில் இருந்த பேட்டரியிலிருந்து தீப்பிடித்ததாக விசாரணையில் தெரியவந்தது.