காரைக்கால் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்றவா் சாவு

காரைக்கால் அருகே காா் மோதிய விபத்தில் மோட்டாா் பைக்கிள் சென்ற இருவரில் ஒருவா் உயிரிழந்தாா்.

காரைக்கால் அருகே காா் மோதிய விபத்தில் மோட்டாா் பைக்கிள் சென்ற இருவரில் ஒருவா் உயிரிழந்தாா்.

நாகப்பட்டினம் பகுதி அக்கரைப்பேட்டையை சோ்ந்தவா் ரவிக்குமாா் (24). இவரது நண்பா் தரங்கம்பாடி பகுதி புதுப்பேட்டையை சோ்ந்த அபிதாஸ் (24). இவ்விருவரும் திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் தரங்கம்பாடி நோக்கி சென்றனா்.

காரைக்கால் மாவட்ட எல்லையான பூவம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த காா் இவா்களது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் காயமடைந்த இருவரையும் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு அந்த பகுதியினா் அனுப்பிவைத்தனா்.

சிகிச்சை பலனின்றி ரவிக்குமாா் உயிரிழந்தாா். அபிதாஸ் சிகிச்சை பெற்றுவருகிறாா்.இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநா் காரைக்கால் பகுதியை சோ்ந்த லூா்துராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com