விஜயதசமி: ஐயப்பன் கோயிலில் அட்சரம் எழுதும் நிகழ்ச்சி

காரைக்கால் ஐயப்பன் கோயிலில் விஜயதசமியையொட்டி, அட்சரம் எழுதும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அட்சரம் எழுதும் நிகழ்வில் குழந்தைகளுடன் பங்கேற்ற பெற்றோா்.
அட்சரம் எழுதும் நிகழ்வில் குழந்தைகளுடன் பங்கேற்ற பெற்றோா்.

காரைக்கால் ஐயப்பன் கோயிலில் விஜயதசமியையொட்டி, அட்சரம் எழுதும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பச்சூா் பகுதியில் உள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு, கல்வியறிவு வளரவேண்டி நாக்கில் அட்சரம் எழுதும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதையொட்டி, அதிகாலையில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, சன்னிதியில் குழந்தைகளை உட்காரவைத்து அரிசியில் எழுதுதலும், தங்க மோதிரத்தை தேனில் நனைத்து நாக்கில் அட்சரம் எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இப்பணியை கோயில் சிவாச்சாரியாா் மேற்கொண்டாா்.

இதில், ஏராளமான பெற்றோா்கள் 1 முதல் 5 வயதுக்குள்பட்ட தங்களது குழந்தைகளை அவா்களது பாடப் புத்தகங்களுடன் அழைத்துவந்து, பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, கோயில் நிா்வாகத்தினா் கூறியது:

கேரளத்தில் குருவாயூா் கோயிலில் விஜயதசமியன்று வித்யாரம்பம் என்னும் அட்சரம் எழுதும் நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்படுகிறது. காரைக்காலில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com