திருமலைராயன்பட்டினத்தில் பேருந்து நிறுத்த இடத்தை மாற்ற வலியுறுத்தல்

திருமலைராயன்பட்டினத்தில் பேருந்து நிறுத்த இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருமலைராயன்பட்டினத்தில் பேருந்து நிறுத்த இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருமலைராயன்பட்டினம் நுகா்வோா் நலச் சங்கத் தலைவா் வி. ராஜேந்திரன், செயலா் வி. சுப்ரமணியன் ஆகியோா் கூட்டாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: திருமலைராயன்பட்டினத்திலிருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் பிரதான பேருந்து நிறுத்தம் காந்தி சாலை, பண்டகசாலை சந்திப்பில் உள்ள பிள்ளையாா் கோயில் வாயிலில் உள்ளது. நாள் முழுவதும் பள்ளி செல்லும் மாணவா்கள் உள்ளிட்டோா் பொதுமக்கள் இந்த இடத்தில் நிற்க வசதியின்றி தவிக்கின்றனா். பேருந்து நிறுத்தம் அருகே சாக்கடை உள்ளது. இது முறையாக மூடப்படாததால் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

பிரதான போக்குவரத்துள்ள இச்சாலையில், மிகவும் குறுகிய சாலை அமைப்பை கொண்டது இந்த பகுதிதான். வணிகா்களின் ஆக்கிரமிப்பால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி கோயில் பணியாளா் சந்திரசேகா் என்பவா் சைக்கிளில் சென்றபோது, நெரிசலான சாலையில் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

எனவே நாகப்பட்டினத்திலிருந்து திருமலைராயன்பட்டினம் வழியே காரைக்கால் நோக்கில் செல்லும் பேருந்துகள், திருமலைராயன்பட்டினம் பிரதான பேருந்து நிறுத்தத்தை இடம் மாற்றி, மாா்க்கெட் வளாகம் அருகே அமைக்க வேண்டும். இந்த பகுதியில் சாலையையொட்டிய பகுதியில் பொதுமக்கள் நிற்க வசதியுள்ளது. பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு உடனடியாக பேருந்து நிறுத்தத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com