முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
ஐஸ் கட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வாயு கசிவு; 2 பேருக்கு மயக்கம்
By DIN | Published On : 24th October 2019 11:17 PM | Last Updated : 24th October 2019 11:19 PM | அ+அ அ- |

ஐஸ் கட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட வாயு கசிவில் 2 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு செல்லும் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஐஸ் கட்டி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் புதன்கிழமை மாலை குழாய் ஒன்றில் திடீரென அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து, நிறுவன ஊழியா்கள் வாயு வெளியில் பரவுவதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். எனினும், வாயு வெளியேறியதால் நிறுவனத்தின் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த சிலா் வாயுவை சுவாசிக்க நோ்ந்துள்ளது.
இதில், அப்பகுதியைச் சோ்ந்த தாஜூதீன் (47), செல்லம்மாள் (70) ஆகிய இருவரும் மயக்கமடைந்தனா். அருகிலிருந்தோா் அவா்களை உடனடியாக மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மலா்மதி, வேதநாயகம், சிவா, சதீஷ் ஆகிய 4 போ் மீது காரைகால் நகரக் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு, தொழிலாளா் நலத் துறை விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளனா்.