மழை காரணமாக காரைக்கால் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (அக்டோபா் 31) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் :
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு அக்டோபா் 31-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளாா்.