காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் எஸ். பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சனிக்கிழமை சிறுநீரகம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 மணி முதல் பிற்பகல்
2 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.