அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு முகாம்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை  (செப்டம்பர் 14) நடைபெறவுள்ளது.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை  (செப்டம்பர் 14) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட  துணை ஆட்சியர் எஸ். பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சனிக்கிழமை சிறுநீரகம்  மற்றும்  சிறுநீரக அறுவை  சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 
2 மணி வரை நடைபெறும் முகாமை  பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com